Tuesday, July 07, 2009

நகைச்சுவை: அலுவலகங்களில் அதுக்கும் வசதி வந்துவிட்டது!

நகைச்சுவை: அலுவலகங்களில் அதுக்கும் வசதி வந்துவிட்டது!

”எதுக்கு வசதி?”

”அதை நான் சொல்லக்கூடாது! நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்”

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1


2


3


4


5

வாழ்க வளமுடன்!

Sunday, July 05, 2009

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

எச்சரிக்கை: சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது
மொழிமாற்றம் மட்டும் அடியேனின் கைவண்ணம்!

ஜனத்தொகை 100 கோடி

10 கோடி ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் இருக்கும் முதியவர்கள்

10 கோடிப் பேர்கள் அரசில், அரசியலில், அல்லது அரசுத்துறையில்
(அவர்களை வேலை வாங்குவது பெரும்பாடு)

34 கோடிப் பேர்கள் வறுமைக் கோட்டில். அல்லது நடுத்தரக்கோட்டில்
கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் விலைவாசி அவர்கள் அழுத்திப்
பிடித்துக் கொண்டிருக்கிறது

ஒரு கோடி அறிவுஜீவிகள் ஐ.டி. துறையில்
(அவர்கள் வேலை செய்வது வளர்ந்த நாடுகளுக்காக)

25 கோடி பள்ளியில் அல்லது கல்லூரியில்

1 கோடி ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள்

15 கோடி வேலையில்லாதவர்கள், வேலை தேடுபவர்கள்

ஒரு கோடி எப்போதும் மருத்துவமனையில் அல்லது மருத்துவ மனையை நோக்கி

ஒரு கோடி சிறையில், விசாரனையில் அல்லது நீதிமன்ற வளாகங்களில்

இரண்டு கோடி ஆசாமிகள் மதுவிற்பனையில் அல்லது அது கிடைக்கும்
இடங்களில்

மீதம் இருப்பது நீங்களும் நானும்தான்!

நீங்கள் என் பதிவைப் படித்துக் கொண்டிருக்கிறீகள்;
நான் உங்கள் பின்னூட்டத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.



வாழ்க வளமுடன்!

Friday, July 03, 2009

நகைச்சுவை: இதுதான்டா இந்தியா!

நகைச்சுவை: இதுதான்டா இந்தியா!

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்த நகைச்சுவைப் படங்கள்
ஒன்பதை உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்

பார்த்து ரசியுங்கள்

இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது!

1

2

3

4

5

6

7

8

9

இந்த ஒன்பது படங்களில் எது அசத்தலாக உள்ளது?
============================================================

வாழ்க வளமுடன்!

Wednesday, July 01, 2009

நகைச்சுவை: நேற்று, இன்று & நாளை

நகைச்சுவை: நேற்று, இன்று & நாளை

இது நகைச்சுவைப் பதிவு.உம்மன்னா மூஞ்சிகள்
எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கவும்


மற்றவர்கள் ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம்

தலைப்பு: நேற்று, இன்று & நாளை
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1. நேற்று!


2. இன்று!

3. நாளை ?
++++++++++++++++++++++++++++++++++++++++
டிஸ்க்ளெய்மர்:
நம்ம ஊர்ப் பெண்கள் மிகவும் சாதுவானவர்கள். நல்லவர்கள். குத்து விளக்குகள்
இதில் குறிப்பிடப்பெற்றுள்ளவர்கள் எல்லாம் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆகவே நம் ஊர்ப் பெண்ணினக் காவலர்கள் இதைப் பார்த்துவிட்டுக் குஸ்திக்கு வரவேண்டாம்.

இது இறக்குமதிச் சரக்கு (படங்களே அதற்குச் சாட்சி)


வாழ்க வளமுடன்!

Tuesday, June 30, 2009

போட்டிக்கதை: மணக்கும் குழம்பும் ருசிக்கும் பாயாசமும்!

போட்டிக்கதை: மணக்கும் குழம்பும் ருசிக்கும் பாயாசமும்!
----------------------------------------------------
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை
போட்டிக்காக எழுதப்பெற்றது)

"அடுத்த பிறவி என்று ஒன்று இருந்து - ஒருவர் இறந்த பிறகு, அவரிடம்
இருக்கும் சொத்துக்களை, சேமித்து வைத்துள்ள பணத்தை அடுத்த
பிறவிக்கு எடுத்துக் கொண்டு போகலாம் என்ற வசதியையும் கடவுள்
கொடுத்திருந்தால் - ஒரு பேச்சுக்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்
- உங்கள் அப்பச்சி உங்களுக்கென்று எதை வைத்துவிட்டுப் போயிருப்பார்
- எவற்றையெல்லாம் கொண்டு போயிருப்பார் - சொல்லுங்கள் பார்க்கலாம்"
என்று கதிரேசன் கேட்டவுடன் அவரது நண்பர் ராமண்ணன் புன்னகைத்தார்.
யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

ராமண்ணனின் முழுப்பெயர் இராமநாதன் செட்டியார். வயது 50 ஆகிறது.
அவர் கதிரேசனுக்கு சமவயதுக்காரர். இருவரும் ஆயத்த ஆடை
ஏற்றுமதியாளர்கள். திருப்பூரில் வாசம். அண்ணன் என்று ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள். அதெல்லாம் ஒரு மரியாதைக்காகத்தான்.

"என்ன மெளனமாக இருகிறீர்கள் - கற்பனை செய்து மனதில் தோன்றுவதைச்
சொல்லுங்கள்" என்று தொடர்ந்து சொன்னார் கதிரேசன்.

உடனே பட்டென்று பதில் சொன்னார் அவர்.

"இதில் கற்பனைக்கெல்லாம் ஒன்றும் வேலையில்லை. உண்மையைச்
சொன்னால் - எங்கள் அப்பச்சி எங்களுக்கு ஒன்றையும் வைத்து விட்டு
போயிருக்கமாட்டார். மேலும் எங்கள் இடுப்பில் இருக்கும் பட்டுக்கயிரைக்
கூட நான் கட்டியது என்று உருவிக் கொண்டு போயிருப்பார்"

"பிறகென்ன? இருக்கும் ஐம்பது கோடி ரூபாய் சொத்தும் இலவசமாக
வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்குள் ஏன் இவ்வளவு
சண்டை, சச்சரவுகள்? உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து
பேசி சந்தோசமாக அவற்றைப்பிரித்துக் கொள்ளுங்களேன்.

"இல்லை கதிரேசன், பிரச்சினை பிறந்தவர்களால் இல்லை. எங்கள் வீட்டிலுள்ள
அண்ணன், தம்பி ஆச்சி, தங்கைகளுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை. எங்கள்
அறுவருக்கும் திருமணம் என்ற ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நாங்கள்
சின்னவயதில் இருந்ததைப்போன்று அன்பாகப் பாசமாக, ஒற்றுமையாக இன்று
வரை இருந்திருப்போம்.பிரச்சினை எல்லாம் வந்தவர்களால்தான். எங்கள் வீட்டுப்
படியேறிவந்த மாப்பிள்ளைகள், மருமகள்களால்தான் எல்லாச் சிக்கல்களுமே.
என் மனைவியையும் சேர்த்துதான் இதைச் சொல்கிறேன். அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் என்று சேர்ந்து இனிக்கும் பாயசமாக இருந்த எங்கள் வாழ்க்கையில் உப்பு, புளி, மிளகாய்த்தூள் என்று காலதேவன் பல பொருட்களைக் கொட்டிக் கலந்து விட்டுப் போய்விட்டான். நாங்கள் இப்போது ருசிக்கும் பாயசமாகவும் இல்லை மணக்கும் குழம்பாகவும் இல்லை!"

"வந்தவர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் ராமண்ணே! உங்கள் ஆறு
பேர்களுக்கும் இ¢டையே தற்போது ஒரே மாதிரியான எண்ணங்கள், சிந்தனைகள்,
செயல்பாடுகள் உள்ளனவா சொல்லுங்கள்!"

"எங்கள் ஆறுபேர்களுடைய எண்ணம், சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் கெட்டுப் போய் விட்டன. ஒப்புக்கொள்கிறேன். அதற்குக் காரணம் நான் சொன்னதுதான். எங்களைக் கட்டிக் கொண்டவர்களால் ஏற்பட்டதுதான் அது!"

புன்னகைத்த கதிரேசன் அழுத்தமாகச் சொன்னார்.

"சாவியில்லாத பூட்டை யாரும் தயாரிப்பதில்லை. அதுபோல இறையமைப்பில்
தீர்வு இல்லாத பிரச்சினையே கிடையாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உங்கள் பிரச்சினைக்கான சாவி. அதாவது தீர்வு!"

"நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் எங்களிடம் சாவிகள் இல்லை. சாவிகளெல்லாம் வந்தவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது. வைக்கப்போரில் கட்டியிருக்கும் நாயைப் போல அவர்களும் திறந்து விடமாட்டார்கள். எங்களையும் திறக்க விடமாட்டார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. அதை எங்களால் உண்டாக்கவும் முடியாது. அவர்களை மீறி ஒன்றும் செய்யவும் முடியாது"

"மற்றவர்களை விடுங்கள். நீங்கள் சொன்னால் உங்கள் மனைவி கேட்பாரா?
மாட்டாரா?"

"சொந்த விஷயம் என்றால் கேட்பாள். பெரிய வீட்டுப் பிரச்சினை என்றால்
கேட்க மாட்டாள். இல்லாத வீட்டில் இருந்து வந்தவள் என்பதற்காக, தன்
நாத்தினார்கள் இருவரும் தன்னைக் கழுதையை விடக்கேவலமாக நடத்தினார்கள் என்கின்ற ஆதங்கம் அவள் மனதில் ஆறாத ரணமாக இன்றைக்கும் உள்ளது. அதை எப்படி ஆற்றுவது நீங்களே சொல்லுங்கள்?''

"சரி இந்த நாற்றச் சண்டையால் எதை இழக்கிறோம்? எதெது முடங்கிக் கிடக்கிறது என்பதை ஒருவர்கூட உணரவில்லையா?"

"என்னைத் தவிர யாரும் உணரவில்லை. உணரும் நிலையிலும் இல்லை.
எல்லாவற்றிற்கும் தன்முனைப்புதான் (ego) காரணம். ஒருமுறை எடுத்துச் சொன்ன போது என்ன சொன்னார்கள் தெரியுமா?"

"என்ன சொன்னார்கள்?"

"உனக்கு மனசிருந்தால் ஒன்றும் வேண்டாம் என்று நீ விட்டுக்கொடுத்துவிட்டுப்போ. மற்றதை சட்டப்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். பழநியாண்டவன் சித்தம் அதுவாகத்தான் இருக்கும் என்றால் அதற்கும் நான் தயார் என்று சொல்லி விட்டுவந்தேன்"

"எப்போது சொன்னீர்கள்? யாரிடம் சொன்னீர்கள்?"

"எங்கள் பெரிய அண்ணனும், இரண்டாவது அண்ணனும் ஒரு கூட்டணியாக
உள்ளார்கள். அவர்களிடம்தான், சென்ற வாரம் நடந்த தர்க்கத்தில் சொல்லிவிட்டு
வந்தேன்"

"ஆண்டவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? பாருங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று சாமி வந்ததைப் போல சொன்னார் கதிரேசன்.

ராமண்ணன் வியப்பு மேலிடக் கேட்டார், "எப்படிச் சொல்கிறீர்கள்?"

"பழநியப்பன் சித்தநாதன். சித்தர்களுக்கெல்லாம் நாதன் அவன். அரிய சக்திகளை
உடையவன். தன்னை நம்பியிருக்கும் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவன் அவன். அவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று உணர்வு மேலிடச் சொன்ன கதிரேசன் தங்களுடைய உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறு எழுந்து விட்டார்.

என்ன நடந்தது?

மேலே படியுங்கள்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ராமநாதனின் அப்பச்சி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தான் உயிரோடு இருந்த
காலம்வரை எல்லாவற்றையும் தன் காலடியிலேயே வைத்திருந்தார். விளங்கச்
சொன்னால் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்.

அபரிதமான சம்பாத்தியம். பங்கு வணிகத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. மண் கூடப் பொன்னானது. உப்புமா கம்பெனிகூட அவர் பங்கை வாங்கினால் உலகளாவிய கம்பெனியாக மாறியது. நான்கு மகன்களையும் நன்றாகப் படிக்க வைத்தார். இரண்டு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்ததோடு, கொட்டிக் கொடுத்துப் பெரிய இடங்களில் மணம் செய்தும் வைத்தார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, அதாவது தன்னுடைய 72வது வயதில், ஒரு நாள்
பொட்டென்று போய்விட்டார். வீட்டோடு இருந்த நெடுங்குடிச் சமையற்காரரின்
சாப்பாட்டை மத்தியானம் சாப்பிட்டு விட்டுப் படுத்தவர். எழுந்திரிக்கவேயில்லை.
அவருக்கு முன்பாகவே அவரது மனைவியும் போய்ச் சேர்ந்திருந்ததால், அவரை
எழுப்பவும் ஆள் இல்லை.

அடுத்தவீட்டுச் செட்டியார்தான், அவரின் முகப்பு அறைக் கதவைத் தட்டிக் கண்டு
பிடித்து அனைவருக்கும் தகவல் சொன்னார்.

கேதத்திற்கு வந்தவர்கள் 'நல்ல சாவு' என்ற சான்றிதழை வழங்கிவிட்டுப் போனார்கள்

மரணத்திற்கு மட்டும்தான் முன்னுரிமையும் இல்லை, வயது வரிசையும் இல்லை. எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அவருக்கு ஆயுசுப் பலனை எழுதிக் கொடுத்த ஜோதிடர்கூட 90 வயது வரை வாழ்வார் என்று எழுதிக்
கொடுத்திருந்தார்.

பதினெட்டு ஆண்டுகளை எந்தக் கணக்கில் பற்று எழுதினான் காலதேவன் என்பது
தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது? போனவர் போனவர்தானே!

இருந்தவரை திடகாத்திரமாகத்தான் இருந்தார். அதனால்தான் எதையும் தன்
மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லை. உயிலும் எழுதிவைக்கவில்லை.
பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார். எதற்கும் வாய்ப்பே இல்லாமல் காலதேவன் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

அதற்குப் பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது. அவரின் இறப்பை அறிந்த
வங்கி அதிகாரிகள் அவர் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள், வைப்புத்
தொகைகளிலெல்லாம் சிவப்பு மையால் சுழி போட்டுவிட்டார்கள். அதுவே ஆறு
கோடிக்குமேல் தேறும். பிள்ளைகளில் ஒருவர் கூட அந்தப் பணத்தில் கைவைக்க
முடியவில்லை. வாரிசுச் சான்றிதழ், ஆட்சேபனையின்மைக் கடிதம், உரிமை
கோரும் கடிதம் என்று ஏகத்துக்கும் கெடுபிடி.

அப்பச்சியின் சவண்டிக்குள்ளாகவே இவர்களுக்குள் ஒற்றுமை போய்விட்டது.
முதலில் வீட்டில் இருந்த 200 கிலோ வெள்ளிப் பாத்திரத்தில் ஆரம்பித்த சண்டை,
இரண்டு இடங்களில் அப்பச்சிக்குத் திரேக்கியம் செய்யும் நிலைமையில் முடிந்தது. கடைசியில் வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.

பெட்டகத்தில் இருந்த இடம், பூமி கிரயப்பத்திரங்கள் எல்லாம் ஒரு மகன் கைக்குப்
போய்விட்டது. பிரோ நிறைய இருந்த பங்குப் பத்திரங்கள் எல்லாம் இன்னொரு
மகன் கைக்குப் போய்விட்டது. மொத்தத்தில் யாரும் எதையும் விற்கமுடியாத நிலைமை. யாரும் எதையும் அனுபவிக்க முடியாத நிலைமை.

நடப்புச் சண்டைகளால் அனைவருக்கும் பொழுது மட்டும் நன்றாகப் போகிறது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பிய இராமநாதன் செட்டியாரை, வக்கீல் நோட்டிஸ் வரவேற்றது. அவருடைய கூட்டணியில் இருந்த மூன்றாவது அண்ணன்தான் அதை அனுப்பியிருந்தார்.

பத்து ஆண்டுகளாகப் பிரிபடாமல் இருக்கும் தங்கள் குடும்பச் சொத்தைத் தன்
காலத்திற்குள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாலும், அதற்குரிய சூழ்நிலை தங்கள் குடும்பத்தில் இல்லாததாலும், அசையாத சொத்துக்களில் தனக்குரிய பங்கைப் பிரிபடாத பங்காகத் (undived share in the properties) தான்
விற்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டில் தான் இறங்கியிருப்பதாகவும், அப்படி விற்கும் நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லை என்றும் எழுதியிருந்தார்.

ராமநாதனுக்குச் சள்ளையாக இருந்தது. திருப்பூரில் தனது வியாபரத்தைக் கவனிப்பதா? அல்லது இதுபோன்ற நச்சரவுகளில் சிக்கிக் கொண்டு உழல்வதா?

தன் மனைவியை அழைத்து நோட்டிஸைக் காண்பித்தார்.

ஆச்சி தெளிவாகப் பேசினார்கள்.

"என்னை மட்டும்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது உங்களையும்
உருட்ட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் ஐம்பது அறைகள் இருந்தாலும் ஒரு
அறையில்தான் படுக்க முடியும். ஆயிரம் மாடுகள் இருந்தாலும் வேளைக்கு ஒரு
ஆழாக்குப் பால்தான் குடிக்க முடியும். நமக்கு நீங்கள் தற்போது சம்பாதிப்பது
போதும். சம்பாதித்துச் சேர்த்துவைத்திருப்பது போதும். உங்கள் அப்பச்சியின்
சொத்து ஒன்றுகூட வேண்டாம். எனக்கு ஒன்றுகூட வேண்டாம் என்று அத்தனை
பேருக்கும் நீங்கள் நோட்டிஸ் கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் அடங்குவார்கள்"

செவிட்டில் அரைந்தாற்போன்று இருந்தது மனைவின் சொற்கள்.

மின்னலென ஒரு முடிவிற்கு வந்தார் ராமநாதன்.

அடுத்த இரண்டு நாட்களில் செட்டிநாட்டிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்று
அதைச் செயல்படுத்தத் துவங்கினார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிவன் கோவில் காரியக்காரரும், மற்றும் கூடியிருந்த அறங்காவலர்களும் திகைத்துப் போய்விட்டார்கள்.

தன் தந்தை வழிப்பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் சிவன் கோவிலுக்குத்
தானமாக அளிக்கிறேன் என்று அவன் எழுதிக் கொண்டுவந்து கொடுத்த பத்திரத்தை ஒன்றிற்கு இரண்டுமுறை படித்துப் பார்த்தவர்களுக்கு வியப்பாகவும் இருந்தது. எழுதிக் கொடுத்த பத்திரத்துடன் சொத்து விவரம் பற்றிய லிஸ்ட்டும் விலாவரியாக இருந்தது. தற்போதைய மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் அறுபது கோடி ரூபாய்கள். வீட்டில் பிறந்த
பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து சம பங்காகப் பிரித்தால்கூட கோவிலுக்கு பத்துக் கோடி ரூபாய் வந்து சேரும்.

வந்தவர் தன் மனைவி, மகன், உடன் ஒரு வழக்குரைஞர் சகிதமாக பக்கா
ஏற்பாட்டுடனேயே வந்திருந்தார்.

முதலில் சமாதானப் படுத்த முயன்றவர்கள், அவர் தெளிவாக இருந்ததால் முறைப்படி கோவிலின் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து நடந்ததெல்லாம் முக்கியமில்லை. கோவிலின் அறங்காவலர் ஒருவர் மிகுந்த அரசியல் செல்வாக்கு உடையவர். தில்லியில் செளத்பிளாக் எனப்படும் மத்திய அரசின் பிரதான அலுவலகத்தில்கூட கோவில் மடப்பள்ளியில் நுழைவதைப் போன்று சர்வ சாதாரணமாக நுழைந்து திரும்பக்கூடியவர்.

ஆகவே எல்லாம் கைச் சொடுக்கிலேயே நடந்து முடிந்தது

ராமாநாதனின் வீட்டு உறுப்பினர்கள் அழைக்கபெற்றார்கள், நடந்த ஒரு வாரப்
பஞ்சாயத்தில் அனைத்தும் சீரானது. மூன்று மாத காலத்தில் அனைத்தும் நேரானது. ராமநாதனின் சொத்துக்களை உடன்பிறப்புக்கள் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க கோவிலுக்கும் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாய் வந்து சேர்ந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன, கதை முடியவில்லையா?

அதெப்படி முடியும்? சித்தநாதன் கணக்கு ஒன்று பாக்கியிருக்கிறதே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வந்த ஆவணியில், ராமநாதனின் மகனுக்கும், கதையின் துவக்கத்தில்
வந்தாரே கதிரேசன் - அவருடைய ஒரே மகளுக்கும் விமரிசையாகத் திருமணம்
நடந்தேறியது.

ராமநாதன், தோது, பணம், வற்றல் வரளி, முறுக்கு, மாவுருண்டை என்று எதுவும்
வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டதால், நொந்துபோன கதிரேசன், சும்மா
விடக்கூடாது என்று நினைத்து, திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் இருந்த
அதுவும் புஷ்பா தியேட்டர் அருகில் இருந்த, தனக்குச் சொந்தமான இரண்டு
ஏக்கர் காலி மனையைத் தன் பெண்ணிற்குச் சீதனமாக எழுதிக் கொடுத்து விட்டார். அதன் சந்தை மதிப்பு முப்பது கோடி ரூபாய்.

காலி இடத்தை அப்படியே வைத்திருந்தால் யாராவது குடிசை போட்டுக் கொடி
ஏற்றிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி, ராமநாதனும், அவருடைய
மகனுமாகச் சேர்ந்து அங்கே பெரிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறார்கள்.

அதைவிடுங்கள். விஷயம் தெரிந்தவர்கள் ஊரில் என்ன பேசிக்கொள்கிறார்கள்
தெரியுமா?

"சிவன் கோவிலுக்குப் போன ராமநாதனின் பங்கு, சித்தநாதன் மூலம் இரட்டிப்பாகத் திரும்பி வந்துவிட்டது. அதுதான் சித்தநாதனின் மகிமை!"

அது முக்கியம் இல்லை; இதுதான் முக்கியம்:
விட்டுக் கொடுத்தவர்கள் என்றும் கெட்டுப்போனதில்லை! அதுதான் வாழ்க்கை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

Thursday, June 18, 2009

ஓஹோ, இதுதான் காதல் என்பதா?


ஓஹோ, இதுதான் காதல் என்பதா?

சிலர் காதல் வயப்பட்டு உருகிக் கொண்டிருப்பார்கள்.
காதலுக்கு வயப்பட்டு அலைபவர்களின் அடையாளங்கள் என்னென்ன?
அல்லது காதலின் அடையாளம்தான் என்ன?

நகைச்சுவையாக அல்லது நகைச்சுவையில்லாமல், படங்களுடன் ஒருவர்
காதலைப் பட்டியல் இட்டுள்ளார். சரிதானா, பார்த்துச் சொல்லுங்கள்!

இறக்குமதிச் சரக்கு

=================================================


1
2
3

4
5
6

7
-----------------------------------------------------------------------
ஏழு படங்களில் எது சரியாக உள்ளது? சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

வாழ்க வளமுடன்!

Wednesday, June 17, 2009

நகைச்சுவை விளம்பரங்கள்


நகைச்சுவை விளம்பரங்கள்

நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.

விளம்பரங்களில்தான் எத்தனை வகை?
சில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
சிரித்து மகிழுங்கள்

1
மருத்துவமனை விளம்பரம்:
புகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி

2
ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:
வெற்றி என்பது உறவு
அதிக வெற்றி; அதிக உறவு!
-------------------------------------
3
மதுவிற்கான விளம்பரம்:
குடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்
நிறுத்திவிட்டேன் - படிப்பதை!

4
எங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை
பாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.

5
அழகு சாதன விளம்பரம்:
உங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்?
ஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது!
உங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்?
அம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது!

6
பாரில் இருந்த விளம்பரம்:
கவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நுழையும்போதே பணத்தைச் செலுத்திவிடுங்கள்!

7
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை:
உங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்!

8
பார்பர் சலூன் விளம்பரம்:
எங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் ‘தலை’ யீடு வேண்டும்!

9
போக்குவரத்து விளம்பரம்:
வாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்
- அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.
ஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு!

10
பியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்:
இங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய
பாட்டியாக இருக்கலாம்.She May Be Your Grandmother !

11
கொசுறு
ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
பெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்!

இறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!

எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுப் போங்கள்!






வாழ்க வளமுடன்!

Monday, June 15, 2009

சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

கீழே உள்ளவற்றைப் படியுங்கள். முடிந்தால் சிரியுங்கள்
சண்டைக்கு வரவேண்டாம்

1
காதலித்தது ஒருவரை;
கைப்பிடித்தது இன்னொருவரை
கைபிடித்தவர் கணவர் அல்லது மனைவியாகிறார்
காதலித்தவர் 'கடவுச்சொல்' ஆகிவிடுகிறார்!

*********
2
உலகின் அசத்தலான குழந்தை ஒன்றுதான்; ஒவ்வொரு தாய்க்கும் அது கிடைத்திருக்கிறது
உலகின் அசத்தலான மனைவி ஒருத்திதான்; ஒவ்வொரு பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அது கிடைத்திருக்கிறது!

*********
3
மனிதனின் கனவு

தாயார் நினைப்பதுபோல எப்போதும் நேர்மையாக இருப்பது
தன் குழந்தை நினைப்பதைப்போல எப்போதும் செல்வந்தனாக இருப்பது
மனைவி சந்தேகிப்பதைப்போல பல பெண்களின் உறவு கிடைப்பது!

*********
4
Husband & wife are like liver and kidney.
Husband is liver & wife Kidney.
If liver fails, kidney fails.
If kidney fails, liver manages with other kidney.

மின்னஞ்சலில் வந்தது. மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!


வாழ்க வளமுடன்!

Saturday, May 02, 2009

ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!

ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!

ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், தில்லியில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த டாக்சி டிரைவரும், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இறந்துபோய் மேலுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.

இருவரின் கணக்குப் புத்தகத்தையும் பார்த்த சித்திரகுப்தன், டாக்சி டிரைவருக்கு சகல வசதிகளையும் உடைய அரண்மனையைக் காட்டித் தங்கும்படி சொல்லிவிட்டு, சாமியாருக்கு ஒரு ஓலைக் குடிலைக் காட்டி தங்கும்படி உத்தரவிட்டான்.

சாமியாருக்கு வருத்தம்

"எத்தனை பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியிருப்பேன். எனக்கு இங்கே ஏன் இந்தக் கதி?"

சித்திர குப்தனிடம் மெல்லக் கேட்டார்.

அவன் அதிரடியாகப் பதில் சொன்னான்.

"உம்முடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்த மக்களெல்லாம் தூங்கினார்கள். அவன் வண்டியோட்டிக் கொண்டு போகையில் அதில் சென்ற மக்களெல்லாம் தூங்காமல் இறைவனைப் பிராத்தனை செய்தார்கள்"

இப்போது தெரிகிறதா?

செய்யும் தொழில் முக்கியமில்லை! மக்களை என்ன செய்ய வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்!



வாழ்க வளமுடன்!

Wednesday, April 08, 2009

தண்ணியடிக்கும் இடத்திற்குத் தலைவர் வந்தால் என்ன ஆகும்?

தண்ணியடிக்கும் இடத்திற்குத் தலைவர் வந்தால் என்ன ஆகும்?

வீடியோ க்ளிப்பிங் உள்ளது.
என்ன ஆகும் என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்


video


வாழ்க வளமுடன்!

Friday, April 03, 2009

எங்கேதான் அடிதடி இல்லை?

நமது நாட்டு மக்களவையில்தான் கைகலப்பு அடிதடி என்று நினைக்கிறீர்களா?
தவறு!
எங்கேதான் அடிதடி இல்லை?
மற்ற நாட்டு அவைகளில் நடந்த அடிதடிகள் படங்களாக உள்ளன. பார்த்துத்தெரிந்துகொள்ளுங்கள்..

1. Turkey

2. Mexico

3. Not known (Name written in Urdu)

4. South Korea


5. South Korea

6. Ukraine

7. Ukraine



8. Russia


9. Russia

10. Italy

11. தைவான்


12. தைவான்

13. இந்தியா

14. சோமாலியா

கையில் காலணியுடன் சண்டையில் இறங்கியிருக்கும்
நம்மூர் அம்மணிதான் இருப்பதிலேயே சூப்பர்!
=================================================

வாழ்க வளமுடன்!

Monday, March 23, 2009

எல்லாமே தேர்தலுக்காகத்தான்டா!

எல்லாமே வயிற்றுக்காகத்தான்டா என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சொல்லாமலே கேள்விப்பட வேண்டியது இது:
எல்லாமே தேர்தலுக்காகத்தான்டா!

12 படங்கள் உள்ளன. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

1

2

3

4

5

6

7

8

9

10


11

12

படங்கள் மின்னஞ்ச்லில் வந்தவை. எந்தப் படம் ந்ன்றாக உள்ளது?
வாழ்க வளமுடன்!

Tuesday, March 17, 2009

கத்தி இருக்கு : கவலை எதற்கு?

கத்தி இருக்கு : கவலை எதற்கு?

எட்டுப் படங்கள் உள்ளன. அனைத்தையும் பாருங்கள்
கடைசிப் படம் அசத்தலாக இருக்கும்; பார்க்கத்தவறாதீர்கள்.

இந்த எளிமை, செளகரியம் cheap & best எல்லாம் இந்தியாவில்
மட்டும்தான் கிடைக்கும். மற்ற வளர்ந்த நாடுகளில் சாத்தியமில்லை!















குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என்று சட்டம் சொல்கிறதே!
இங்கெல்லாம் சட்டம் இல்லையா?
--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

Monday, March 16, 2009

தொழும் இடத்தில்கூட எதற்காக இந்த அவசரம்?

தொழும் இடத்தில்கூட எதற்காக இந்த அவசரம்?

வீடியோ உள்ளது.தொழும் இடத்தில்கூட எதற்காக இந்த அவசரம்? நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
---------------------------------------------
வீடியோப் படத்தில் உள்ள காட்சி இயற்கையாக இருந்ததால் வலையேற்றினேன்
பின்னூட்டத்தில் வந்தவர்கள் நால்வரில் மூவர் அது செயற்கையாக உள்ளது என்று
கூறியதால், அதை நீக்கி விட்டேன். மெஜாரிட்டிக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
அல்லவா?

அவர்களுக்கு நன்றி உரித்தாகுக!

படம் மின்னஞ்சலில் வந்தது.

வாழ்க வளமுடன்!

Tuesday, March 10, 2009

குட்டிப் பெண்னின் நாட்டியம்

குட்டிப் பெண்ணின் நாட்டியம்

இந்த வீடியோ உங்களுக்காகத்தான். பார்த்து ரசியுங்கள்

Switch on your audio!


video

வாழ்க வளமுடன்!

Friday, February 27, 2009

நன்றி சொல்வேன் உங்களுக்கு, விருதைக் கையில் தந்ததற்கு!

தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் எனும் பிரிவில் எனது 'செட்டிநாட்டு வீடுகள்'
என்கின்ற கட்டுரைக்கு (தமிழ்மணம் விருதுகள் 2008) விருது கிடைத்துள்ளது. அதை
உங்களுக்கு மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறேன்

விருதுபெற்ற அந்தப் பதிவிற்கான சுட்டி இங்கே உள்ளது

வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

தமிழ்மணம் விருதுகள் 2008ல் பங்கு பெற்றவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும்
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஆக்கங்களைத் தமிழ்மணம் திரட்டியின் மூலம் தொடர்ந்து பதிவிட்டு வருவதால்
அதன் மூலமே எனது பதிவுகள் பலரையும் சென்றடைகிறது.

தமிழ்மணம் நிர்வாகத்தினர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றி !

மூன்று விருதுகளைப் பெற்ற பதிவர் டாக்டர் புரூனோ அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
அதேபோல தலா இரண்டு விருதுகளைப் பெற்ற உண்மைத்தமிழருக்கும், KRS (ரவி சங்கர்)
அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

தமிழ்மணம் விருதைப் பற்றிய செய்தியை முதன் முதலில் தனி மின்னஞ்சல் மூலம்
தெரியப்படுத்திய நண்பர் நாமக்கல் சிபி அவர்களுக்கு சிறப்பு நன்றி உரித்தாகுக!

அன்புடன்
SP.VR.சுப்பையா

வாழ்க வளமுடன்!

Monday, February 16, 2009

செவிட்டில் அறைந்ததைப் போன்று ஒரு செய்தி!

செவிட்டில் அறைந்ததைப் போன்று ஒரு செய்தி!

என்ன செய்தி?

பதிவில் உள்ள ஒரு சிறு வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
தெரியாமல் ஒரு நாளும் குறை சொல்ல வேண்டாம்."

படம் மின்னஞ்சலில் வந்தது!


video

வாழ்க வளமுடன்!

Sunday, February 08, 2009

மீண்டும் கோவைக்கு வந்த பாடும் நிலா!


மீண்டும் கோவைக்கு வந்த பாடும் நிலா!

6.2.2009 வெள்ளிக்கிழமை மாலை, கோவை P.S.G college of Technology
மைதானத்தில் அசத்தலாக ஒரு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
கோவை மேலும் குளிர்ந்தது. பலர் மெய்மறந்தனர்

Zee தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தாரும், Hello FM' பண்பலை வானொலி
நிறுவனத்தாரும் இணைந்து அதை நடத்தினர்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட் பாடும் நிலா பாலு அவர்கள் அந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு பாடியதாகும். அவருடன் இரண்டு இளம் திரைப்படப்
பாடகிகளும் சேர்ந்து பாடியது மேலும் சுவையாக இருந்தது.

யார் அவர்கள் என்கிறீர்களா?

ஒருவர் தீபா, இன்னொருவர் ரோஷிணி!

நினைத்தாலே இனிக்கும்' என்று தலைப்பிடப் பெற்றிருந்த அந்நிகழ்ச்சிக்கு,
உண்மையிலேயே இனிமையை உண்டாக்கும் லக்ஷ்மண் ஸ்ருதி' இசைக்குழுவினரின்
இசை, சுவையைக் கூட்டி, எண்ணற்ற பாடும் நிலா பாலு அவர்களின் ரசிகர்களை
மெய்மறக்கச் செய்தது.

மாலை 6:05 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சி இரவு 10:30 மணி வரை நடைபெற்றது.

Over to the pro gramme!
-------------------------------------------------------------------------
6:57 மணிக்குத்தான் திரு.S.P.B அவர்கள் மேடை ஏறினார். வழக்கம்போல தன்
பெற்றோர்களையும் தன்னுடைய ஆசான்களையும் நினைவு கூர்ந்து விட்டு,
ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் வணக்கம் சொல்லி விட்டுத் தன் முதல்
பாடலைப் பாடத் துவங்கினார்

முதல் பாட்டாக என்ன பாடலைப் பாடினார்?

"நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே"

படம்: தூங்காதே தம்பி தூங்காதே
-------------------------------------------------------------------------
2
மணி 7:03
முதல் பாட்டு எப்போதுமே அம்மாவிற்குத்தான் என்று விளக்கம் சொன்னவர்,
அடுத்த பாடல் காதலிக்கு என்றவுடன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது,

"காதலின் தீபம் ஒன்று - ஏற்றினாளே
என் நெஞ்சில் இன்று"

பாடலுக்கு வயலின் இசைக்கருவிகளும், புல்லாங்குழலும் சிறப்பைச் சேர்த்தன.

படம்: தம்பிக்கு எந்த ஊரு?"
-------------------------------------------------------------------------
3.
மணி 7:10
பாடியது: ரோஷிணி
படம் : பட்டியல் என்னும் திரைப்படம்

"நம்ம காட்டில...... மழை பெய்யுது
நம்ம பாட்டில....... சுதி ஏறுது!"
--------------------------------------------------------------------------
4.
மணி 7:16
பாடியவர்: ரோஷிணி
படம்: தசாவதாரம்

"முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா"
--------------------------------------------------------------------------
5.
மணி 7:23
திரு.S.P.B அவர்கள் பாடினார்கள்
படம்: நிழல்கள்

"மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..
(மடை திறந்து..)"

அதே உற்சாகத்துடனும், துள்ளலுடனும் பாடினார் என்பதை
இங்கே குறிப்பிட வேண்டும்!
வாழ்க அவருடைய உற்சாகம்: வளர்க அவருடைய இசை நேயம்!
--------------------------------------------------------------------------------------
6.
மணி 7:30
திரு.S.P.B அவர்கள் பாடகி தீபாவுடன் இணந்து பாடினார்

"வளையோசை கலகலவென...." என்று துவங்கும் பாடலைக்
கலக்கலாகப் பாடினார்கள்

படம்: சத்யா
--------------------------------------------------------------------------------------
7.
மணி. 7:35
பாடியவர்கள்: லக்ஷ்மண்சுருதி இசைக்குழுப் பாடகர்கள்

"டாக்ஸி டாக்ஸி நண்பா நீயொரு இலவச டாக்ஸி"

படம்: சக்கரைக்கட்டி
--------------------------------------------------------------------------------------
8.
மணி 7:43
அசத்தலாக சாக்சபோன் ஒலிக்க, துவங்கும் பாடலை
திரு.S.P.B அவர்கள் பாடகி ரோஷிணியுடன் இணைந்து பாடினார்

படம்: உல்லாசப் பறவைகள்

"ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

(ஜெர்மனியின்)

சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்

(சித்திரமே..)"
----------------------------------------------------------------------------------------
9
மணி 7:49
திரு.S.P.B அவர்கள் பாடகி தீபாவுடன் இணந்து பாடினார்

துவக்கத்தில் ஒலிக்கும் ஹம்மிங் இசை, அப்படியே கேட்பவர்களைக்
கிறங்கடிக்கும் விதமாக இருந்தது.

படம்: சிப்பிக்குள் முத்து.

பாடல்: துள்ளி துள்ளி...

"துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
ஆ..ஆ. .. ஆ.. ஆ...ஆ...ஆ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன.........
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்"
-----------------------------------------------------------------------------------------------------
10
மணி 7:56
திரு.S.P.B அவர்கள் குழுப் பாடகி அனிதாவுடன் இணந்து பாடினார்
படம்: விக்ரம்"

"வனிதா மணி வன மோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி வந்தாடு"
-----------------------------------------------------------------------------------------------------
11
மணி 8:03
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினர் பாடினார்கள்
படம்: தாம் தூம்

துவக்கத்தில் ஹம்மிங்க் பாடிய கலைஞர்கள் அசத்தலாக இசைத்தார்கள்

"அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்"
-----------------------------------------------------------------------------------------
12
மணி 8:08
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினர் பாடினார்கள்
படம்: சிலம்பாட்டம்


"ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி"
--------------------------------------------------------------------------------------
13
மணி 8:15

அனைவரும் எதிர்பார்த்திருந்த சூப்பர் ஹிட் பாடலை
திரு.S.P.B அவர்கள் பாடினார்

படம்: புதுப்புது அர்த்தங்கள்

"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண மாலை..)
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)"
-----------------------------------------------------------------------------------------
14
மணி 8:21
அடுத்த பாடலையும் திரு.S.P.B அவர்களே பாடினார்
படம்: நினைத்தாலே இனிக்கும்

"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்"
------------------------------------------------------------------------------------------
15
மணி 8:29
சிறுவன் ஒருவன் பாடினான்
படம்: சகலகலாவல்லவன்

"ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ"
--------------------------------------------------------------------------------------------
16
மணி 8:35
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினரின் பாடல்
படம்: வில்லு

"ஏ ராமா ராமா, ராமன்கிட்டே வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமன்கிட்டே கதையைக் கேட்டேன்"
-------------------------------------------------------------------------------------------
17
மணி: 8:40
திரு.S.P.B அவர்கள் பாடகி தீபாவுடன் இணந்து பாடினார்
படம்: அடிமைப் பெண்
பலரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடலைப் பாடுவதாகக் குறிப்பிட்டார்

"ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ"
-----------------------------------------------------------------------------------------
18
மணி 8:47
திரு.S.P.B அவர்கள் அசத்தலாகப் படினார்.
படம்: காதல் ஓவியம்

"நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)"
------------------------------------------------------------------------------------------
19
மணி: 8:55
பாடகி ரோஷிணி பாடினர்.
லக்ஷ்மண்சுருதி' இசைக் குழுவினர் சேர்ந்து பாடினார்கள்.

படம்: தாமிரபரணி

"கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சிக்குவேன் மோதிரமா
செவப்பாக இருக்காளே கோவைப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியை தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா"
------------------------------------------------------------------------------------------
20
மணி 9:00
ரோஷிணி பாடினார்
படம்: நல்லவனுக்கு நல்லவன்

"வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே"
------------------------------------------------------------------------------------------
21
மணி 9:05
படம்: பூ
பாடல்: தட்டான் தண்ணிக்குள்ள

"டட்டா டட்டா டடடா
டார டட்டா டடடா
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை இரண்டும் பொந்துக்குள்ள
ச்சூ ச்சூ மாரி
குத்தாளத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள
ச்சூ ச்சூ மாரி"
------------------------------------------------------------------------------------------
22
மணி 9:10

சிறுவன் ஒருவன் பாடினான்
நன்றாகப் பாடினான்
படம்: காதலில் விழுந்தேன்

"நாக்க மூக்க அட்றா அட்றா நாக்க மூக்க"
-------------------------------------------------------------------------------------------
23
மணி 9:16
திரு.S.P.B அவர்கள் அருமையாகப் பாடினார்.
படம்: புன்னகை மன்னன்

"என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே"
-------------------------------------------------------------------------------------------
24
மணி 9:21
திரு.S.P.B அவர்கள் உடன் ரோஷிணியும் சேர்ந்து பாட, அருமையாகப் பாடினார்.

படம்: நீங்கள் கேட்டவை (இசை, இளையாராஜா)

"அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி
கொடியே என்னைக் கண்டு சொக்காதடி"
------------------------------------------------------------------------------------------
25
மணி 9:28
மிமிக்கிரி நிகழ்ச்சி:
அசத்த்ப்போவது யாரு நிகழ்ச்சிப் புகழ்
திரு. மைக்கேல் அவர்கள் பலகுரல் நிகழ்ச்சிஒன்றை நிகழ்த்தினார்

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சி சற்று வித்தியாசமாகவும்
சுவையாகவும் இருந்தது.
-------------------------------------------------------------------------------------------
26
மணி: 9:50
திரு.S.P.B அவர்கள் அருமையாகப் பாடினார்.
படம்: நினைவெல்லாம் நித்யா

"பனிவிழும் மலர் வனம் - உன்
பார்வை ஒரு வனம்"
-------------------------------------------------------------------------------------------
27
மணி 9:56
திரு.S.P.B அவர்கள் கலக்கலாகப் படினார்.

படம்: சிவாஜி

"சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராஸுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு"
----------------------------------------------------------------------------------
இந்தப் பாடலுடன் - அதாவது மணி இரவு 10:00ஐத் தாண்டி விட்டதால்
அடியேன் கிளம்பி விட்டேன்.

இதற்குப் பிறகு நிகழ்ச்சி எத்தனை மணிவரை நடந்தது என்பது தெரியவில்லை
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் எவரேனும் தகவல் தெரிவித்தால் பதிவில்
சேர்த்துவிடுகிறேன்

நன்றி,
வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா

வாழ்க வளமுடன்!

Friday, January 30, 2009

இந்த இடத்தில் குப்பை கொட்ட உங்களால் முடியமா?

இந்த இடத்தில் குப்பை கொட்ட உங்களால் முடியமா?

பதிவில் ஒரு சின்ன வீடியோ க்ளிப்பிங் உள்ளது. பார்த்து விட்டுச் சொல்லுங்கள்

இந்த இடத்தில் குப்பை கொட்ட உங்களால் முடியமா என்று!

இடம் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டைப் பகுதி

வாகன ஓட்டிகள் உடைக்கப்பட்டிருக்கும் சென்ட்டர் மீடியனுக்குள் நுழைந்து,
எதிரில் வரும் வாகனங்களைப் பற்றிக் கவலைப் படாமல் கலக்கலாக வாகனங்களை
ஓட்டிச் செல்வதைப் பாருங்கள்.

ஒலிபெருக்கியைத் தட்டிவிட்டுப் பாருங்கள்.

இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

வாழ்க இந்தியா! வளர்க அதன் பெருமை!

படம் மின்னஞ்சலில் வந்தது!



video

வாழ்க வளமுடன்!

Monday, January 26, 2009

திருந்தாவிட்டால் என்ன ஆகும்?

சிலர் அவர்களாகவே திருந்தி விடுவார்கள். இன்னும் சிலர் திருந்தவே மாட்டார்கள்.
அவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

தண்டனை கொடுத்துத் திருத்தலாமா?

முடியாது!

அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.

அதை வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் தனது கருத்தை மிக அழுத்தமாகச் சொல்கிறார்

அது என்னெவென்று பார்ப்போம், வாருங்கள்!
---------------------------------------------------------------------------------------------------
தமிழனைத் தட்டி எழுப்பிய பாடல்கள் வரிசையில் இன்று ஐந்தாவது பாடல்

அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

பாடல் (எண்.5 )

பாடலை எழுதியவர்: கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல் இடம் பெற்ற படம்: திருடாதே
வருடம்: 1961
நடிப்பு: புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் & பி.சரோஜாதேவி
===================================================

திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ

(திரு)

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
(திரு)

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது!

(திரு)

[திருடாதே,1961]

வாழ்க வளமுடன்!

Thursday, January 22, 2009

காற்றலையில் உருவான பந்தம்!

பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு
மாலையிட்டு மகிழும் நமது சக பதிவர்
திரு.கோவை ரவி அவர்கள்

காற்றலையில் உருவான பந்தம்!

பந்தம் என்பது உறவைக்குறிக்கும் உயிரோட்டமான் சொல். உறவை
மேம்படுத்திக் காட்டும் சொல்!

உறவு எப்படிக் காற்றலையில் உருவாகும் என்று புருவத்தை உயர்த்துபவர்கள்,
பதிவை முழுமையாகப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------
கோவை மாவட்டத்தில் உள்ள 36 லட்சம் மக்களுக்கும் தெரிந்தவர்களைப்
பட்டியல் இட முயன்றால், திரு.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள்,
திருமதி வனிதா மோகன் அவர்கள், டாக்டர் G.பக்தவட்சலம் அவர்கள்,
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்கள், தொழில் அதிபர்.
திரு.என்.மகாலிங்கம் அவர்கள் தொழில் அதிபர்.திருஜி.கே சுந்தரம் அவர்கள்
தொழில் அதிபர்.திரு.S.V.பாலசுப்பிரமணியன் அவர்கள், அன்னபூர்னா
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள், கவிஞர்.கவிதாசன் அவர்கள், எழுத்தாளர்
திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் என்று பத்துப் பெயர்கள் சட்டென்று
மனக்கண் முன் வந்து நிற்கும்.

அவர்கள் அனைவரையும் மக்கள் நேரில் அல்லது செய்தித் தாள்களின்
மூலம் நன்கு அறிவார்கள்.

ஆனால் நேரிலோ அல்லது பத்திரிக்கைச் செய்திகளிலோ அல்லது புகைப்படம்
மூலமாகப் பார்க்கப் படாமல் அனைத்து மக்களின் மனதிலும் நிற்பவர்
ஒருவர் கோவையில் இருக்கின்றார்.

தன் இனிய குரலால் மட்டுமே அறியப்பட்டவர் அவர்

வாரத்தில் ஆறு தினங்கள் இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை
கோவை சூரியன் பண்பலையில் அசத்தலாகப் பழைய திரை இசைப்பாடல்களை
மனதைக் கவரும் வண்ணம் விதம் விதமாகத் தொகுத்து வழங்குபவர் அவர்.

அசத்தும் குரலுக்குச் சொந்தக்காரர். தன் குரலை வைத்தே எண்ணற்ற
ரசிகர்களை வலைவீசிப் பிடித்துதன் கட்டுக்குள் வைத்திருக்கும் சாமர்த்தியசாலி.

யாரந்தக் குரல் மன்னர்?

அவருடைய பெயர். திரு.R.G.லக்ஷ்மி நாராயணா!

குரலைக் கேட்டால், குழந்தைகூட, அவருடைய பெயரைச் சொல்லும்!

வாரநாட்களில் முத்தாய்ப்பாய், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அன்பர்
திரு.L.G.லக்ஷ்மி நாராயணா அவர்கள் தொகுத்து வழங்கும், 'இரவின் மடியில்'
எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். பிரபலத்திற்குக் காரணம்
பண்பலை ரசிகர்களில் ஒருவர் தெரிவு செய்து அனுப்பும் பத்துப் பாடல்கள்,
எழுதியவரின் விளக்கங்களுடன், தொகுப்பாளரின் விளக்ககமும் சேர
ஒலிபரப்பாகும். நிகழ்ச்சி கிறங்கும் படியாக இருக்கும் என்று சொல்லவும்
வேண்டுமா?

அந்த நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமையன்று, நமது சக பதிவர்
திரு கோவை ரவி அவர்கள் தெரிவு செய்த முத்தான பத்துப்பாடல்கள்
ஒலிபரப்பாகின.

அதன் சிறப்பு என்னவென்றால், பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன்
அவர்களின் பரம ரசிகரான ரவி அவர்கள், மற்ற பாடகர்களின் பாடல்களைத்
தெரிவு செய்து, ஒலிபரப்பி எண்ணற்ற பண்பலை நேயர்களை மகிழ்ச்சிக்
கடலில் ஆழ்த்தினார்.

வாருங்கள் அந்த மகிழ்ச்சிக்கடலில் நாமும் சற்று நனைவோம்!
--------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ரவி அவர்கள் இப்படிக்குறிப்பிட்டிருந்தார்:

"இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன்
அவர்களை நான் சந்தித்துச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பாலூஜி
அவர்கள்,'நீங்கள் எனது பாடல்களை மட்டும் அல்லாமல் அனைத்துப் பாடகர்களின்
பாடல்களையும் கேட்டு, அவற்றையும், அவற்றின் சிறப்பையும் அடையாளம்
காண வேண்டும்! என்றார்.அதன் காரணமாகவே இந்தத் தொகுப்பில் மற்ற பாடகர்கள்,
மற்றும் பாடகிகளின் பாடல்களைக் கொடுத்துள்ளேன்"
-------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியில் ஒலி பரப்பான அந்த முத்துக்கள்!

1.
மதுராபுரி வேந்தனின் புகழைப்பாடும் மதுரமான கானம் முதற்பாடலாக ஒலித்தது.
பாடியவர்.திரு.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். பாலமுரளி அவர்களைப் பற்றிச்
சொல்லவா வேண்டும்? சங்கீத சாகரம் அவர். அவர் பாடல் முதலில் ஒலிபரப்பானது
நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தது.

பாடல் இடம் பெற்ற படம்: மகாசக்தி மாரியம்மன்

"மகரந்தம் தான் ஊதும் அரவிந்தம் உன் பாதம்
ஸ்ரீ கோபால கிருஷ்ணனே ஸ்ரீ தேவி மணவாளனே!"

பாடலின் சரணத்தில்வரும் வரிகளை ரவி அவர்கள் சிறப்பித்துத் தன் விளக்கத்தில்
சொன்னார்:

அலைபாயும் கடல் ஏழும் அசையாமல் இசை கேட்கும்
பறவை நடுவானில் பறக்காமல் துயில் மேவும்
கால் வைத்த இடமெல்லாம் பூவாகும்
கைவைத்த இடமெல்லாம் தேனூறும்

பாடல் அற்புதமாக இருந்தது. அரிய பாடலும் கூட!
----------------------------------------------------------------------------------
2.
மன்மதனுக்கு எத்தனை பெயர்கள்?

மன்மதனை அறிவோம். அவனுக்கு உரிய மற்ற பெயர்களைச் சொன்னதோடு,
அதைச் சொல்லித் துவங்கும் பாடலைத்தந்தார் கோவை ரவி.

அனங்கண் அங்கஜன் அன்பன் வசந்தன் எனும் பெயர்களும் மன்மதனுக்கு
உண்டாம்.

ரசிகர்களை மகிழ்விற்கும் அப்பாடலை பாடும் நிலா.திரு.S.P. பாலசுப்பிரமணியன்
அவர்களும், செல்வி. L.R. ஈஷ்வரி அவர்களும் சேர்ந்து பாடினார்கள்.

காதல் தலைவன் மன்மதன், தன் காதலி ரதி தேவியுடன் தென்றலென தேரில்
வலம் வரும் காட்சியை நெகிழ்ந்து நெக்குருகப் பாடினார்கள் பாடிய இருவரும்

"அனங்கன், அங்கஜன், அன்பன் வசந்தன் என
வணங்கும் என் உயிர் மன்னவா" என்று துவங்கும் அந்தப் பாடல் அருமையாக
இருந்தது.

பாடல் இடம் பெற்ற படம்: கண்காட்சி

பாடலின் துவக்கத்தில் தொகையறாவில் இயக்குனர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்
இப்படிக் கூறி நம்மை மகிழ்வித்திருந்தார்.

வெண்நிலவைக் குடைபிடித்து
வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க
மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி
கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே
அழகுமகன் வில்லேந்தி
கண் முல்லை, தாமரை,மா
தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!

படத்தில் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் மன்மதனாகவும்,
குமாரி பத்மினி அவர்கள் ரதிதேவியாகவும் நடித்திருந்தார்கள்

பாடலின் தனித்ன்மையையும், சிறப்பையும் பற்றி பாலூஜி அவர்கள் சொல்லக்கேட்டு,
அதைத் தேடிப் பிடித்துத் தானும் கேட்டு மகிழ்ந்த செய்தியை ரவி அவர்கள் இந்தப்
பாடலின் துவக்கத்தில் சொன்னார்.

அறிவிப்பாளரும், இது யாரும் தெரிவு செய்திட முடியாத சிறந்த பாடல் எனக்
கூறியதோடு, அதைத் தெரிவு செய்து கொடுத்திருந்த ரவி அவர்களையும் மனதாராப்
பாராட்டினார்.

அதோடு இந்தப் பாடலின் மூலம்தான் மனமதனுக்கு உரிய மற்ற பெயர்களும்
தெரிய வந்துள்ளன என்றும் கூறி மகிழ்ந்தார்
---------------------------------------------------------------------------------------------
3.
இன்னிசைக்குயில் பி.சுசிலா அம்மையார் அவர்கள் பாடிய பாடல்
படம்: அவள் தந்த உறவு

"மஞ்சள் இட்ட நிலவாக
மைபூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆனந்தம்"

என்று துவங்கும் பாடல் ஆனந்ததைக் கூட்டும் விதமாக ஒலித்தது.

"SPB அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை
ரவி. சுசீலா அவர்கள் பாடிய ஆயிரம் ஆயிரம் பாடல்கள் இருக்கையிலே இந்தப்
பாடலை நீங்கள் தெரிவு செய்ததில் இருந்தே, மற்ற பாடகர்களின் மீது நீங்கள்
கொண்டிருக்கும் அபிமானம் நிரூபணம் ஆகிவிட்டது!" என்று துவக்கத்தில்
தன் உரையில் அறிவிப்பாளர் திருவாளர் R.G.லக்ஷ்மி நாராயணா அவர்கள்
சிலாகித்துச் சொன்னார்!
---------------------------------------------------------------------------------------
4.
ஆனந்தபைரவி ராகத்தில் சூலமங்கலம் ராஜலெட்சுமி அவர்கள், கர்ணன்
திரைப்படத்தில் பாடியிருந்த பாடல் ஒலிபரப்பப் பெற்றது.

படத்தை ஆழ்ந்து நேசித்தவிதம் தெரிவில் தெரிகிறதாகத் தொகுப்பாளர்
பாடலின் துவக்கத்தில் ரவி அவர்களைப் பாராட்டிய பிறகே பாடலை ஒலிக்கவிட்டார்.

படத்தில் பாடல், கர்ணன் தன் மனைவியை அவள் தாய்வீட்டிற்கு அனுப்பும்போது
பின்னணியில் ஒலிக்கும்

"போய்வா மகளே, போய் வா!" என்று துவங்கும் பாடல் மனதை ஈர்க்கும் விதமாக
இருந்தது.
----------------------------------------------------------------------------------------
5
அடுத்து நகைச்சுவைக்கு இடம் அளித்து வித்தியாசமான பாடல் ஒலிபரப்பானது.

படம்: இருவர் உள்ளம்
பாடியவர்கள்: AL.ராகவன் மற்றும் L.R.ஈஷ்வரி

"புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை" என்று துவங்கும் பாடல் அருமையாக இருந்தது.

பாடலைப் படத்தில் நடிகவேள்.திரு.M.R. ராதா அவர்களும் நடிகை.திருமதி T.P.முத்து
லெட்சுமி அவர்களும் பாடியிருப்பார்கள்

நடுவில் இப்படி வரிகள் வரும்:

நாயகி: "ஆசையுடன் பேசி நாளாச்சு"
நாயகன்: "ஆபத்து இன்று அங்கேதான் உருவாச்சு!"

"நீ அடுத்து என்னைத் தலாட்டு!" என்ற வரியுடன் பாடல் முடியும்போது திரு.M.R. ராதா
அவர்களின் முகபாவம் அசத்தலாக இருக்கும் என்று தொகுத்தவர் குறிப்பிட்டிருந்தார்
-------------------------------------------------------------------------------------------------------
6.
மிகவும் வித்தியாசமான பாடலைத் தந்தார்கள்

"மலர்களின் ராஜா, அழகினில் ரோஜா" என்று துவங்கும் பாடல் நாத வெள்ளத்துடன்
ஒலிபரப்பானது.

உடனே நாயகன்,"காதலின் ராணி, கலைகளின் வாணி" என்று அவளை விளித்துப்
பாடுவான்

படம்: வள்ளி தெய்வாணை
படியவர்கள்: தனசேகர், மல்லிகா

இந்தப் பாடலுக்கு, அறிவிப்பாளர் இப்படிச்சொன்னார்.

"ரவி, நாம் இருவரும் ஒரே அலைவரிசையில் சங்கமிக்கிறோம். இந்தத் தெரிவு
அதைத்தான் சொல்கிறது!"
---------------------------------------------------------------------------------------
7
அசல் இருக்கையில் நகல்கள் பாடினால், அந்தப் பாடல் எப்படி இருக்கும்
பாருங்கள் என்ற குறிப்புடன் அடுத்த பாடல் ஒலிபரப்பானது.

T.M. செளந்தரராஜன் அவர்களின் நகலான கோவை செளந்தரராஜன் அவர்களும்
L.R. ஈஷ்வரி அவர்களின் சகோதரி L.R. அஞ்சலி அவர்களும் சேர்ந்து இந்தப்
பாடலைப் பாடியிருந்தார்கள்

பாடல் இடம் பெற்ற படம்: உங்கள் விருப்பம்

"மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா
மந்திரத்தைச் சொல்லி விடு ராமா" என்று துவங்கும் பாடல் ஒலிபரப்பானது.

படத்தில் காட்சிக்கு முகம் கொடுத்திருந்தவர்கள் திரு,தேங்காய் சீனிவசன்
அவர்களும் திருமதி.மனோரமா அவர்களும்!
----------------------------------------------------------------------------------
இந்த இடத்தில் நிலையத் தொகுப்பாளர் திரு.R.G.லக்ஷ்மி நாராயணா! அவர்கள்
வந்திருந்த பல குறுஞ் செய்திகளைப் படித்துக் காட்டிப் பாடலைத் தெரிவு
செய்து, தெரிவிற்கான விளக்கங்களையும் அளித்திருந்த நமது நண்பர் ரவி
அவர்களை உவந்து பாராட்டினார்
----------------------------------------------------------------------------------
8
ஏழிசை மன்னர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், மழலை அரசி திருமதி
M.S.ராஜேஷ்வரி அவர்களும் சேர்ந்து பாடியிருந்த, பலரது கண்ணிலும்
அதிகம் பட்டிராத பாடல் ஒலிபரப்பானது.

பாடல் இடம் பெற்ற படம்: மாதவி

நாயகன்:
"தோட்டக்கார சின்னமாமா தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா
காதல் எல்லாம் நடக்குது பாரங்கே!"

நாயகி:
"தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன
காடு வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே
சுகமும் பெறலாம் சும்மா கிட்டே வா"

மகிழ்ச்சியை வெள்ளமாகப் பெருக்கும் பாடல் என்று ஒலிபரப்பாளர்
குறிப்பட்டதைப் பாடல் உண்மையாக்கியது!

பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டையார்
----------------------------------------------------------------------------------------
9.
நாத பேதமில்லா இசை நாயகன் திரு.T.M. செளந்தரராஜன் அவர்களும், திருமதி
S.ஜானகி அவர்களும் பாடிய பாடல் அடுத்த தெரிவாக ஒலிபரப்பானது

ஒரு காலத்தில் அனைவரையும் கலக்கிய பாடல்தான் அது!

பாடல் இடம் பெற்ற படம்: பூக்காரி

S.ஜானகி:
"காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் - நான்
கண்ணோடு உறவு கொண்டேன்"

T.M. செளந்தரராஜன்:
"காதலின் பொன் வீதியில்
நான் ஒரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்"

சொல்லவும் வேண்டுமா?
இந்தத் தெரிவும் அருமையான ஒன்றுதான்!
----------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியின் முடிவில், ஒலிபரப்பாளர் திரு.R.G.லக்ஷ்மி நாராயணா அவர்கள் ஒலித்த
முத்தான பாடல்களில் மிகவும் சிறந்த பாடல் என்று, "அனங்கன், அங்கஜன், அன்பன்
வசந்தன் என வணங்கும் என் உயிர் மன்னவா" என்று ஒலித்த பாடலைக் குறிப்பிட்டு
திருவாளர் ரவீந்திரன் அவர்களைப் (அதாங்க நம்ம ரவி அவர்களை) பாராட்டினார்

அதோடு இப்படி அசத்தலாகக் குறிபிட்டு தனது ஒலிபரப்பை அவர் நிறைவு செய்தார்

"ரவீ, காற்றலையில் உருவான இந்த பந்தம் உறுதியானது. தொடரட்டும் உங்கள் சேவை!"
---------------------------------------------------------------------------------------
முழு நிகழ்ச்சியையும் கேட்டு மகிழச் சுட்டியைக் கொடுத்துள்ளேன்

சுட்டி இங்கே!



முழு நிகழ்ச்சியைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும் சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன!

இடைச்சேர்க்கை:
வ.எண் திரைப்படப் பெயர் திரைப்பாடல் பாடியவர்கள், இசையமைத்தவர் பெயர்
1 மகாசக்தி மாரியம்மன் மகரந்தம் தான் ஊதும் எம்.பாலமுரளி கிருஷ்ணா,
கே.வி.மகாதேவன்,1986

2 கண்காட்சி அனங்கன் அம்புஜன் ஏ.பி.நாகராஜன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி, குன்னக்க்குடி வைத்தியநாதன்,1971

3 அவள் தந்த உறவு மஞ்சள் இட்ட நிலவாக பி.சுசீலா, முத்துராமன்,
எம்.எஸ்.விஸ்வநாதன்,1978

4 கர்ணன் போய் வா மகளே சூலமங்களம் ராஜலட்சுமி,எம்.எஸ்.வி.,
டி.கே.ராமமூர்த்தி, 1964,

5 இருவர் உள்ளம் புத்திசிகாமணி பெத்த ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி,
கே.வி.மகாதேவன்,1963

6 மாதவி தோட்டக்கார சின்னமாமா சீர்காழி கோவிந்தரராஜன், எம். எஸ்.ராஜேஸ்வரி,1959,

7 உங்கள் விருப்பம் மஞ்சள் பூசி மஞ்சம் கோவை சௌந்திரராஜன்,
எல்.ஆர்.அஞ்சலி, விஜயபாஸ்கர், 1974

8 வள்ளி தெய்வானை மலர்களில் ரோஜா தனசேகர், மல்லிகா,என்.ஸ்.தியாகராஜன்,1974

9 பூக்காரி காதலின் பொன் வீதியில் டி.எம்.சௌந்திரராஜன்,
எஸ்.ஜானகி, எம்.எஸ்.விஸ்வநாதன், 1973,
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

Tuesday, January 20, 2009

தகாத உறவைக் கண்டு பிடித்த தாய்!


தகாத உறவைக் கண்டு பிடித்த தாய்!

தன் மகன் மணிகண்டன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில்
அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.

இரண்டு பிள்ளைகளில் அவன் மூத்தவன். காலதேவன் கருணையின்றி அந்தத் தாய்க்கு
விதைவைக் கோலத்தைக் கொடுத்திருந்தான். மகனைக் கண்டித்துச் சொல்லவும்
முடியவில்லை.

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன்
தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்
கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை
பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்
ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.

பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!

தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு
வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.

வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும்
மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும்,
சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த
சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின்
சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க
முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.

தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. கவிதா
என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!"
என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும்
வைத்தான்.

ஒருவாரம் சென்றது.

ஒரு நாள் காலை, கவிதா, மணிகண்டனிடம், ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன்
அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு,
அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள்.

மணிகண்டன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம்
என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,

வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு
போனீர்கள் என்று நான் சொல்லவில்லை.
அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும்
தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!

நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!

இப்படிக்கு
அன்பு மகன்
மணிகண்டன்
-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, மணிகண்டனின் தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,

கவிதாவுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

கவிதா தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக
இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில்
நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்!
-----------------------------------------------------------------------------------------
நீதி: தாயிடம் பொய் சொல்லாதீர்கள்
அதிலும் அவள் இந்தியத் தாயாக இருந்தால் நிச்சயம் பொய் சொல்லாதீர்கள்!
----------------------------------------------------------------------------------------
(இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது! மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது)

வாழ்க வளமுடன்!

Wednesday, January 14, 2009

அரங்கத்தின் பொங்கல் வாழ்த்துக்கள்!



வாழ்க வளமுடன்!

Wednesday, January 07, 2009

அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும் நக்கலான விமர்சனமும்!

அவசியம் படியுங்கள். கடைசிவரை படியுங்கள்.
அமெரிக்கப் பொருளாதாரச் சரிவை இதைவிடக் கிண்டி, கிண்டலாக யாரலும்
விமர்சனம் செய்யமுடியாது. அசத்தலான விமர்சனம். கடைசிவரை படியுங்கள்.

எனக்கு மின்னஞ்சலில் வந்தது. அப்படியே உங்களுக்குத் தந்துள்ளேன்.
மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.

எளிய ஆங்கிலத்தில்தான் உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்!
==========================================================

1. The US has made a new weapon that destroys people but keeps the building standing,.
Its called the stock market - Jay Leno

2. Do you have any idea how cheap stocks are ?? Wall Street is now being called
Wal Mart Street Jay Leno

3. The difference between a pigeon and a London investment banker .
The pigeon can still make a deposit on a BMW

4. What's the difference between a guy who lost everything in Las Vegas
and an investment banker ? A tie

5. The problem with investment bank balance sheet is that on the left side
nothing is right and on the right side nothing is left.

6. I want to warn people from Nigeria who might be watching our show,
if you get any e mails from Washington asking for money, it's a scam.
Don't fall for it - Jay Leno

7. Bush was asked about the credit crunch. He said it was his favourite candy bar - Jay Leno

8. The rescue bill was about 450 pages. President Bush's copy is even thicker.
They had to include pictures Jay Leno

9. President Bush's response was to meet some small business owners in
San Antonio last week. The small business owners are General Motors, General
Electric and Century 21. - Jay Leno

10. What worries me most about the credit crunch, is that if one of my
cheque is returned stamped 'insufficient funds'. I won't know whether that refers
to mine or the bank's.
--------------------------------------------------------------------------------

NEW STOCK MARKET TERMS

CEO --Chief Embezzlement Officer.

CFO -- Corporate Fraud Officer.

BULL MARKET -- A random market movement causing an investor to mistake himself for a financial genius.

BEAR MARKET -- A 6 to 18 month period when the kids get no allowance, the wife gets no jewelry.

VALUE INVESTING -- The art of buying low and selling lower.

P/E RATIO -- The percentage of investors wetting their pants as the market keeps crashing.

BROKER -- What my broker has made me.

STANDARD & POOR -- Your life in a nutshell.

STOCK ANALYST -- Idiot who just downgraded your stock.

STOCK SPLIT -- When your ex-wife and her lawyer split your assets equally between themselves.

FINANCIAL PLANNER -- A guy whose phone has been disconnected.

MARKET CORRECTION -- The day after you buy stocks.
CASH FLOW-- The movement your money makes as it disappears down the toilet.

YAHOO -- What you yell after selling it to some poor sucker for $240 per share.

WINDOWS -- What you jump out of when you're the sucker who bought Yahoo @ $240 per share.

INSTITUTIONAL INVESTOR -- Past year investor who's now locked up in a nuthouse.

PROFIT -- An archaic word no longer in use.

---------------------------------------------------------------
எந்த வரி நன்றாக உள்ளது? நீங்கள் ஒருவரியில் அதை சொல்லிவிட்டுப்போங்கள்!


வாழ்க வளமுடன்!

Tuesday, January 06, 2009

நக்கல் ராசி பலன்கள் 2009!

நக்கல் ராசி பலன்கள் 2009!

பத்திரிக்கைகளில் வரும் ராசிபலன்கள் இந்தியாவில் உள்ள 110 கோடிமக்களுக்கும்
பொதுவாக எழுதப்படுகிறது. 110 கோடி வகுத்தல் 12 ராசிகள். சராசரியாக
சுமார் 9 கோடி மக்களுக்கு ஒரு ராசி. அந்த ஒரு ராசிக்கு எழுதப்படும் பொதுவான
பலன் எப்படி அனைத்து மக்களுக்கும் சரியாக இருக்கும்?

தனித்தனியாக, ஜாதகங்களை வைத்து ராசி பலன்கள் மாறுமே?

ஆகவே பத்திரிக்கைகளில் வரும் ராசி பலன்களை நான் படிப்பதில்லை. சீரியசாகவும்
எடுத்துக்கொள்வதில்லை!

சில பலன்களைப் படித்தால் நக்கலடிக்கத் தோன்றும்

ஆனால் உண்மையிலேயே செமை நக்கலாக ஒருவர் ராசி பலனை எழுதியுள்ளார்
கலக்கலாக இருக்கிறது. படித்து மகிழுங்கள்

எழுதிய புண்ணியவானின் பெயர் தெரியவில்லை. எனக்கு அது மின்னஞ்சலில் வந்தது.
சிங்கை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி!

Over to Kalakkal Rasi Palan 2009!
==============================================================

மேஷ ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூனாவது மாடிக்கு
குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா
0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில
போய் ஒளிஞ்சிக்கோங்க!

மேலும் நீங்க இங்கிலீசுல, 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல
ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர்
ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா,
கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம்
டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.
................................................................................................
ரிஷப ராசி மக்களே!

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது.
98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா
உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி
நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாத
தெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு,பாதகாதிபதியான
சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு
எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது
இடம் கிடைக்கும்.

பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை
பால்' குடிக்கிறது நல்லது.
................................................................................................
மிதுன ராசி மக்களே!

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே,
அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது,
காதாலயும் தொடக்கூடாது.
குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம்
பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும்
பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம்.
இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய்
விளக்கு போடணும்
...................................................................................................... .
கடக ராசி மக்களே!

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுறநீங்க,
இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது.
அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா
ஓடுறது நல்லது.

ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட
அஞ்சாவது வீட்டைக் குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய்
மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல
சனி இருக்கறதால,உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய்,
பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று
தேடிப்பாருங்கோ!
..........................................................................................................
சிம்ம ராசி மக்களே!

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login'
ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது.
சாட் ஆகவே ஆகாது.

'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே
வரக்கூடாது.

ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால,
மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா
சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு
வடைமாலை சாத்தறது உத்தமம்.
..............................................................................................................
கன்னி ராசி மக்களே!

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும்
உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது.
வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு
போயிடறது நல்லது.

முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது
நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே
தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.
........................................................................................................................
என்னுரை: இதற்குப் பரிகாரம் எழுதி, அடுத்து உள்ள ஆறு ராசிகளுக்கும்
பலன் எழுதுவதற்குள், அந்த ஜோதிடர் கடத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்
திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து அவர் எழுதிய கலக்கல் பலனில்
கோபமுற்ற சில கட்சிக்காரர்கள் சேர்ந்து அவரைக் கடத்திக் கொண்டு போய்
விட்டதாகத் தெரிய வருகிறது.


தேர்தல் முடிந்து திரும்பி வந்து, 'கை' இருந்தால், விடுபட்ட பகுதியை அவர்
தொடர்ந்து எழுதுவார். பொறுத்திருங்கள்


வாழ்க வளமுடன்!

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!